மறுமலர்ச்சி மற்றும் சீர்த்திருத்த நடவடிக்கைகளுடன் அடிப்படைப் பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்தன. இந்த தொடர் பொருளாதாரமாற்றங்களின் விளைவாக இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்த ஓரளவு நிலையான, உள்ளூர் நிலையிலான, இலாப நோக்கற்ற பொருளாதாரம், பதினான்காம் நூற்றாண்டு மற்றும் அதனை அடுத்து வந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய வலுவான முதலாளித்துவ நிலைக்கு மாற்றம் பெற்றது. வர்த்தகப் புரட்சி என்று அழைக்கப்பட்ட இது திடீரென நிகழ்ந்துவிடவில்லை படிப்படியாகவே நிகழ்ந்தது. புரட்சியின் தொடக்கத்துக்கான காரணங்கள் (அ) மத்தியதரைக்கடல் வர்த்தகம் இத்தாலிய நகரங்களால் கைப்பற்றப்பட்டது.(ஆ) இத்தாலிய நகரங்கள் […]