திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

குறள் : 1வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வ உரை :வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது. கலைஞர் உரை :இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். சாலமன் பாப்பையா உரை :ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே. குறள் : 2நல்லா றெனினுங் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 22- ஒப்புரவறிதல்

1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு. விளக்கம் :-பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?. 3. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற. விளக்கம் :-தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம். 4.ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

அதிகார விளக்கம் வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர், வீடுபேறு பெற நினைப்பவர், தீமை செய்யாது விலகி இருக்க வேண்டும். 1- தீவினையார் அஞ்சார் விழுமியோர் அஞ்சுவர்தீவினை என்னும்   செருக்கு. 2. தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்3. அறிவினுள் எல்லாந் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். 4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.5. இலன்என்று தீயவை […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 20- பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை அதிகார விளக்கம் பயன் தராத எதையும் பெரியவர்கள் எப்போதும் சொல்வதில்லை. பலரை வெறுப்படையும்படி பயனில்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை.பயன் தராத எந்த ஒரு சொல்லும் செயலும் யாருக்கும் நல்லதாக அமையாது. 1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். 2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலின் தீது. 3.நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித்து உரைக்கும் உரை. 4. நயன்சாரா நன்மையின் நீக்கும் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 19 புறங்கூறாமை

புறங்கூறாமை அதிகார விளக்கம் அறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை, ஆனால், பின்னால் புறம் பேசக் கூடாது. தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்க விரும்புவர் பிறரைப் பற்றி புறம் கூற மாட்டார். யாரோ ஒருவரிடம் உள்ள குற்றத்தைப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கும் என்பதை நினைத்தால், வாழ்க்கையில் துன்பம் என்பது இராது. 1. அறம்கூறான் அல்ல […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

நடுநிலை தவறிய வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுக்கு அது தடை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும், அடுத்தவரின் பொருள் மீது ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட்டொழித்துவிட்டேன் என்ற செருக்கு இன்பம் தரும். 1. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும். நடுநிலை தவறி, நல்ல பொருள் என்று ஒரு பொருள் மீது வேட்கை கொண்டால், குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்துவிடும்.  2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவுஅன்மை நாணு […]

UG degree தமிழ் பாடநூல் திருக்குறள் வரலாறு

திருக்குறள்

திருக்குறள் தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம். நூல் அமைப்பு திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும்பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இயல்கள் எனப்படும். இயல்களின் உட்பிரிவுகளாக அதிகாரங்கள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 17 அழுக்காறாமை

பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர். பகைவரால் வரும் அழிவைவிட அதிக அழிவை பொறாமை தந்துவிடும். பொறாமை உள்ளவரைவிட்டு உறவுகள் பிரிந்துவிடும். பொறாமை உடையவர் பொருள்களால் நிறைவடைய மாட்டார்கள். 1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. 2. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். 3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். 4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. 5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 16 பொறையுடைமை

பொறுத்துக்கொள்ளும் பண்பு அவசியம். தன்னை வெட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய்போல் வாழ் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார். மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத்தனமாக வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர். 1) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 2) பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. 3) இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. 4) நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 15 பிறன்இல் விழையாமை

அறம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள், அடுத்தவரின் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. பகை, பாவம், பழி, பயமற்றவர் இல்லறத்தார் ஆவார். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வு சிதையக் காரணமாக இருக்கமாட்டார். 1. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். 2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். 3. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல் தீமை புரிந்துதொழுகு வார். 4. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். 5. எளிதென […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 14 ஓழுக்கமுடைமை

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம். அது வீடுபேறு அடைய உதவும் என்பதால், உயிரைவி மேலானதாகப் போற்ற வேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும், உலகத்துடன் ஒத்திசையும்படி நடப்பவரே கற்றறிந்தவர். 1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 3.ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். 4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 13 அடக்கம் உடைமை

தெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும் அவர் மலையைவிட பெரியவராகக் கருதப்படுவார். வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம். காரணம், தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை அது உண்டாக்கிவிடும். முழுமையாகக் கற்று அறிந்தவர், பணிதலுடன் வாழ்வார். 1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். 4. நிலையின் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 12 நடுவு நிலைமை

யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே நடுவுநிலையாளர். அவரது நடுவுநிலையை அவரது உடல்மொழியே காட்டிவிடும். நல்லவை கெட்டவை நிலைத்தவைழ இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப்போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும். 1. தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். 2. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 3. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 4. தக்கார் தகவிலர் என்பது […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 11 செய்நன்றி அறிதல்

உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும்விட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் உயர் பெற முடியாது. 1) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 2) காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 3) பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 10 இனியவை கூறல்

வாழ்க்கையில் நல்லவற்றை அறிந்தவர் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருக்கும். கண்களை கசிந்துருகச் செய்யும். கொடுப்பதைக் காட்டிலும் இனிமையான சொற்களைப் பேசுதல் சிறந்தது. இனிமையான சொற்கள்தான் நன்மையைத் தரும். இன்முகத்துடன் பேசும் சொற்களில்தான் பயன் அதிகமாக இருக்கும். 1) இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 2) அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 3) முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான் ஆம் இன்சொ லினதே அறம். 4) துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 9 விருந்தோம்பல்

விவசாயத்தை தொழிலாகக் கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருந்தாக இருப்பினும், அதை விருந்துடன் பகிர்ந்துகொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது. 1) இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. 3) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 4) அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல். […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 8 அன்புடைமை

ஒருவர் அன்பானவராக இருந்தால், அவரால் இரக்கத்தை மறைக்க முடியாது. கண்களில் கண்ணிர் வழியும். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் உயிரையும் அடுத்தவற்குத் தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள். 1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். 2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 7 மக்கட்பேறு

ஒருவர் தனது வாழ்நாளில் பெற வேண்டியது அறிவில் சிறந்த குழந்தைகளே. அது பிறவித் துன்பத்தை துடைக்கவல்லது. நமது பிள்ளை என்றாலும், அதனதன் வினைப்பயன் அதனதனை தொடரும். குழந்தைகள் உண்ட மிச்சம் போன்ற அமிழ்து வேறு இல்லை. அவர்களின் குரல் போன்ற இனிமை எந்த இசையிலும் இல்லை. தன் குழந்தைகளுக்கு நல்வாய்ப்பை எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை. தாயும் தன் மகனை சான்றோன் என்பதில் மகிழ்சியடைவாள். குழந்தைகளும் தன் பெற்றோர்க்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும். 1) பெறுமவற்றுள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 6 வாழ்க்கைத் துணை நலம்

வாழ்தலே எல்லாவற்றிலும் சிறந்தது. அதற்குத் துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம் பல கிடைத்துவிடும். ஆனால், நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டியபொழுது வரும் மழையைப் போன்றவள் மனைவி. மேலும், தன்னையும் காத்து, தன்னைச் சார்ந்தவரையும் காப்பவளும் அவளே. எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம். 1) மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித்து ஆயினும் இல்.3) இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்இல்லவள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 5 இல்வாழ்க்கை

உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்புக்கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். எதில் இருந்து கற்பதன் மூலமும், இல்வாழ்வில் இருந்துதான் அதிகமாகக் கற்க முடியும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம். 1) இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற […]